தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை – மத்திய அரசு!

Published by
Rebekal

தடுப்பூசி கொள்கை குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்தக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

உலக முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்ற நிலையில், ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி திட்டம், தடுப்பூசியின் விலை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு தற்போது பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சர்வதேச அளவிலான கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடிய முக்கியமான திட்டங்கள் முற்றிலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அறிவியல் பூர்வமான கருத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் செயல்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மிக அதிகமாக பரவி வரும் நிலையில் நீதிமன்றத்தின் குறுக்கீடு இதில் தேவை இல்லை எனவும் அந்த கொள்கையை குறித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago