கடந்த 7 நாட்களில் இந்தியா முழுவதிலும் 188 மாவட்டங்களில் புதியதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 10,916,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,55,732 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10,621,220 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,39,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதியதாக கொரானா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகவில்லை எனவும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 80 முதல் 85 சதவீதம் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…