கடந்த 7 நாட்களில் இந்தியா முழுவதிலும் 188 மாவட்டங்களில் புதியதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 10,916,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,55,732 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10,621,220 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,39,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதியதாக கொரானா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகவில்லை எனவும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 80 முதல் 85 சதவீதம் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…