சிறுபான்மை சமூகத்தினரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குபதிவானது கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது . இந்த நிலையில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா மாவட்டங்களில் தேர்தல் பேரணியில் ,சீமஞ்சல் பிராந்தியத்தில் உள்ள முஸ்லீம்களான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற வதந்தியை உடைத்தெறிந்து யாரையும் நாட்டிலிருந்து வெளியே அனுப்ப யாருக்கும் தைரியம் இல்லை என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் ,தனது அரசாங்கம் பிராந்தியத்தில் அன்பு,அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவதற்கு செயல்பட்டு வருவதாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எப்போதும் தனது அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும், மாநிலத்தில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார் . மேலும் 15 ஆண்டுகளாக ஆர்.ஜே.டி ஆட்சியில் இருந்து எந்தவொரு வளர்ச்சி பணிகளையும் செய்யாமல் நேரத்தை வீணடித்து வருவதாகவும் கூறிய அவர் எதிர்க்கட்சியினர் சிலர் சாதிகளுக்கும் மத குழுக்களுக்கும் இடையில் சண்டையை ஊக்குவிக்க விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார் .
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…