கொரோனா வைரஸ் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில்,இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ,நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக கூட்டத்தொடரை ரத்து செய்வதையும், ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…