மொபைலில் வீடியோக்கள், திரைப்படங்கள் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க, சிம் கார்டு மற்றும் இன்டெர் நெட் இரண்டும் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் வீடியோ பார்க்க வேண்டும் என பலர் கனவு கண்டு கொண்டிருந்தால் விரைவில் உங்கள் கனவு நனவாக உள்ளது. அடுத்த ஆண்டு டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
இதில், சிம் கார்டு மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்க்க முடியும். ஒலிபரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலர் அபூர்வ சந்திரா பேசுகையில், Sankhya Labs மற்றும் Indian Institute of Technology (IIT) கான்பூர் உருவாக்கிய டைரக்ட்-டு-மொபைல் (D2M) ஒளிபரப்புத் தொழில்நுட்பமானது.19 நகரங்களில் விரைவில் சோதனைகள் நடத்தப்படும் என்றும், டி2எம் தொழில்நுட்பம் நாடு முழுவதும் உள்ள 28 கோடி குடும்பங்களில் 19 கோடி வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!
நாட்டில் 80 கோடி ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அதில் பயனாளர்கள் 69 சதவீதம் பேர் வீடியோ பார்ப்பதாகவும் வீடியோவை அதிகமாகப் பயன்படுத்துவதால், மொபைல் நெட்வொர்க் தடைபடுகிறது என்று சந்திரா கூறினார்.
டிடிஎச் (DTH) எனப்படும் டைரக்ட் டூ ஹோம் (Direct To Home) சேவையைப் போல டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவை செயல்படும். டி2எம் (D2M) மூலம் தொலைதூர பகுதிகள் அல்லது இன்டர்நெட் இல்லாத பகுதிகளில் கூட OTT -யில் வீடியோக்களைப் பார்க்க முடியும். D2M சேவை தொடங்கப்பட்ட பிறகு, D2M சப்போர்ட்(support ) கொண்டபுதிய போன்களும் அறிமுகப்படுத்தப்படும்.
D2M சப்போர்ட்டிற்கு அனைத்து மொபைல் பிராண்டுகளும் தங்கள் தொலைபேசிகளில் D2M ஆண்டெனாவை வழங்க வேண்டும். இது DTH செட்டப் பாக்ஸ் போல் செயல்படும். இதனால், நாட்டின் எந்த மூலையிலும் அமர்ந்து எந்த வீடியோவையும் செயற்கைக்கோள் உதவியுடன் பார்க்கலாம். இன்டர்நெட் மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…