OdishaCM Hospital [Image-ANI]
ஒடிசாவில் நேற்று இரவு ஏற்பட்ட 3 ரயில்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்த நடைபெற்றதில் 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மிகவும் சோகமான ரயில் விபத்து, இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காண பாலசோர் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் நவீன் பட்நாயக், காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…