நம்பிக்கை இல்லா தீர்மானம்.! மணிப்பூர் செல்லும் இந்தியா கூட்டணி.!

Published by
மணிகண்டன்

வரும் 29ஆம் தேதி இந்தியா கூட்டணி சேர்ந்த அரசியல் தலைவர்கள் மணிப்பூர் செல்ல உள்ளனர். 

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். மேலும், அண்மையில் இரு பெண்களை ஆடையின்றி ஒரு கொடூர கும்பல் இழுத்து சென்ற வீடியோ, கூட்டு பாலியல் பலாத்கார செய்திகள் என மணிப்பூர் பற்றி வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க கோரியும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும் தொடர்ந்து 6வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவியேற்றியுள்ளனர். இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மணிப்பூர் செல்ல உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலைமையை அறிந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மணிப்பூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்ய உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்கையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கான ஆதாரங்களை சேகரிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்கள் மணிப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி மணிப்பூர் சென்றாலும், அவரால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பகுதிக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago