கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது ஹசான் மாவட்டம் இந்த மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் மனுகுமார் என்ற இளைஞர். இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து உள்ளார். தன் காதலை பலமுறை அப் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் தெரியப்படுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் மணுவின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டாருக்கும் அந்த இளைஞர்க்கு மகளை கட்டிக் கொடுப்பதில் சம்மதமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு வேலைக்கு சென்ற பெண் இரவு நெடுநேரம் ஆகிய பின்னரும் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள்பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால், துத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் மனுகுமார் என்ற இளைஞர் தனது நண்பர்களின் உதவியோடு இளம் பெண்ணை காரில் கடத்தி சென்றதும் காரில் வைத்தே அப்பெண்ணிற்கு கட்டாயத் தாலிகட்டியதும் தெரியவந்துள்ளது.
தாலிக்கட்டிய அப்பெண்ணோடு அந்த இளைஞர் ராமாநகாராவில் உள்ள உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.தகவல் அறிந்து உடனே ராமாநகாரா பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மனுகுமார் அளித்த வாக்குமுலமானது: டெய்லர் கடைக்கு பணிக்கு தினமும் சென்ற அப்பெண்ணை நோட்டமிட்டு வந்தாகவும் கடத்தலன்று நாங்கள் பேருந்து நிலையத்தில் காருடன் காத்திருந்தோம் அப்போது பேருந்தில் ஏறுவதற்காக நின்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி, காரில் வைத்தே திருமணம் செய்ததாக கூறினார். மேலும் தாலிக்கட்டும் போது பெண்ணின் அழுகை குரல் வெளியே கேட்காமல் இருக்க பாட்டை சத்தமாக ஒலிக்க செய்தோம் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கட்டாய தாலிகட்டிய திருமண வீடியோ காட்சியை என்னுடைய பேஸ்புக்கில் வெளிட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பேஷ்புக்கில் மணு வெளியிட்ட வீடியோவானது சமூகவலையதலத்தில் அதிகவேகமாக பரவியது.ஏற்கனவே பெண் காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையின் பார்வையில் இந்த வீடியோ பட்டது.உடனே இது தொடர்பாக களமிரங்கிய காவல்துறையினர் மனுகுமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்னர் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை அறிந்த அப்பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…