கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். அதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரங்கள் திருடப்பட்டு விடுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பற்றிய பயம் பொதுமக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு ஒரு மோசடி கும்பல் இணையம் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி திருடி விடுகிறது. இதனை பொருட்டு சிபிஐ ஓர் எச்சரிக்கை செய்தியை வங்கிநிர்வாகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தெரிவித்துள்ளது.
சிபிஐ எச்சரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அதாவது தற்போது ஊரடங்கின் காரணமாக ஏராளாமான பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமே நடக்கிறது. அதனை இந்த மோசடி கும்பல் பயன்படுத்திக்கொள்கிறது.
அதாவது, கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். வாடிக்கையாளருக்கு தெரியாத்தனமாக அந்த லிங்கை க்ளிக் செய்தால் அதன் மூலம், செர்பரஸ் ட்ரோஜன் ( Cerberus Trojan ) என்கிற ஆன்லைன் வைரஸ் செல்போனிற்குள் புகுந்துவிடும்.
அதன் மூலம், குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு வங்கி வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரம், டெபிட் கார்டு விபரம் போன்ற முக்கிய விபரங்கள் தெரிந்துவிடுகிறது. இதன் மூலம் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து எளிதில் பணம் திருடப்படுகிறது.
ஆதலால், கொரோனா தொடர்பான எந்தவித முறையற்ற லிங்கை க்ளிக் செய்தும் பயனர்கள் ஏமாற வேண்டாம் எனவும், இந்த மோசடி சர்வதேச அளவில் நடைபெறுவதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது. அதனை தொடர்ந்து, சிபிஐயானது வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பி வாடிக்கையாளர்களை உஷார்படுத்த கோரியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…