Categories: இந்தியா

ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் விவகாரம்.! கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில், முபீன் ரவூப் என்பவரது இயக்கத்தில் நேற்று (அக்டோபர் 6) வெளியாகியுள்ள திரைப்படம் “ஆரோமலிண்டே அத்யதே பிராணாயாம்”. இந்த திரைப்படத்திற்கு பார்க்காமலேயே விமரிசனங்கள் எழுதுகிறார்கள்.  பார்க்காமலேயே எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். பணம் கேட்டு சில ஆன்லைன் விமர்சகர்கள் மிரட்டுகிறார்கள் என கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முபீன் ரவூப் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில், ஒரு படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களை தடுக்க அவர்களை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

இந்த மனு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சிஆர்.ராகேஷ் சர்மா,  சினிமா என்பது பலரது கூட்டு முயற்சி மற்றும்  அவர்களின் கனவு, கடின உழைப்பு.  நேற்று (அக்டோபர் 6) வெளியான ‘ஆரோமலிண்டே அத்யாதே பிராணயம்’ திரைப்படம் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது கொடுமையானது.  அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, பலரது கடின உழைப்பும், அதற்கான அர்ப்பணிப்பும்தான் திரைப்படம் என்பதை மறக்க முடியாது. எதிர்மறை விமரிசனங்களால் பலரும் திரைப்பட ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்சார் போர்டு  விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago