பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food) இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியது எனவே இதை குறைத்து உத்தரவிட வேண்டும் என Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும்.
உணவகங்களில் உண்ணும் பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி- மத்திய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. போராட்டங்களுக்கு 18 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.இந்நிலையில் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஆகியோர் ட்விட்டரில் விமர்சித்தனர் இதையடுத்து பதப்படுத்தப்படாத உடனடியாக உண்ணும் கூடிய வகையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிமாற கூடிய பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சகம் கூறியது.
உடனடியாக சாப்பிடுக்கூடிய பரோட்டாக்களுக்கும் பதப்படுத்தப்பட்ட பரோட்டாக்களுக்கும் வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார்கள். நாள்தோறும் ஏழை எளிய மக்கள் உண்ணக்கூடிய புரோட்டாக்கு 5% ஜிஎஸ்டியே வசூலிக்கப்படும் எனா தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…