Categories: இந்தியா

முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து.! சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மீண்டும் கட்சியில் சேர்ப்பு.!

Published by
மணிகண்டன்

தெலுங்கானாவில் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 118 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக சார்பில் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டி.ராஜா சிங் மட்டுமே வெற்றிபெற்று இருந்தார்.

தெலுங்கானாவில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான டி.ராஜா சிங், சில மாதங்களுக்கு முன்னர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து டி.ராஜா சிங் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டார்.

சிறந்த நிர்வாகி அமித்ஷா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… பிரதமர் மோடி பதிவு.!

இதனை தொடர்ந்து ராஜா சிங் , காங்கிரஸ் அல்லது ஆளும் பிஆர்எஸ் கட்சியில் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை முற்றிலுமாக மறுத்து இருந்தார். மேலும், தனக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு தரும். மீண்டும் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறியிருந்தார்.

வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் வரவுள்ளதால் பிரதான கட்சிகள் தங்கள் கட்சியை மாநில அளவில் பலப்படுத்தி வரும் வேளையில், பாஜக தலைமை , சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் உரிய விளக்கம் அளித்துள்ள காரணத்தால் டி.ராஜா சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக, பாஜக ஒழுங்கு குழு செயலர் ஓம் பகத் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago