ஜிப்பை திறப்பதை பாலியல் குற்றமாக கருத முடியாது.. மீண்டும் பெண் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!

Published by
murugan

நாக்பூரில் 5 வயது சிறுமியை லிப்னஸ் என்ற ஐம்பது வயது ஆண் பாலியல்  கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை கடந்த அக்டோபரில் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலம் படி,  நான் வேலைக்கு சென்று திரும்பி வரும்போது லிப்னஸ் எனது மகளின் கையை பிடித்திருந்தார். மேலும் அவரின் பேண்ட் ஜிப் திறந்து நிலையில் இருந்தது. இது குறித்து எனது மக்களிடம் கேட்டபோது அந்த  நபர் என்னை படுக்கை அறைக்கு உறங்க அழைத்ததாக தெரிவித்தார்.

இதைதொடந்து, நீதிமன்றம் லிப்னசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து. இந்த தீர்ப்பை எதிர்த்து லிப்னஸ் நாக்பூரில் உள்ள மும்பை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா கடந்த 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை பிடித்து இருப்பதை வைத்தும் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது. லிப்னஸ் வன்கொடுமை செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லை, எனவே அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனை 5 மாதமாக குறைக்கப்படுகிறது என்று நீதிபதி புஷ்பா தெரிவித்தார். இவரின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா வழங்கிய மற்றோரு தீர்ப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுஎன்னவென்றால் ஒரு உடலை மற்றோரு உடலால் தொடுவதுதான் பாலியல் வன்முறை, துணிக்கு மேல் பெண்ணின் உடலை தொடுவது வன்கொடுமை ஆகாது என தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவுக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

11 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago