CongressMPs MeetingPS [Image-ANI]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவைகள் தொடங்குவதற்கு முன்பாக I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் இன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் மணிப்பூரில், அங்குள்ள நிலவரம் தொடர்பாக முகாம்களில் இருப்பவர்களிடம் விசாரிக்க 2 நாள் பயணமாக நேரில் சென்றிருந்தனர். மணிப்பூரில் ஆளுநரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற அவைக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் விவாதம் நடத்தப்படுவது தொடர்பாகவும் முக்கியமாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து இரு அவைகளிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற அவைக்கூட்டத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த வலியுறுத்துவது தொடர்பாகவும், இன்று ஆலோசனைக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…