எதிர் கட்சிகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைப்பதற்கு சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பாஜக எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் ஊரடங்கு அமல் படுத்தாவிட்டால் கொரோனாவை பரவுவதாக புகார் அளிக்கின்றனர். மேலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை மக்களிடையே பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் தடுப்பூசித் திட்டத்தினை கூட விட்டு வைக்க வில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்புவதுடன், கன்றுகுட்டியின் நிணநீர் தடுப்பூசியில் இருப்பதாக வதந்திகளை கிளப்பி மக்களிடையே தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப செய்வதாக கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு சேவையாற்றுவதில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சாதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…