எதிர் கட்சிகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைப்பதற்கு சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பாஜக எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் ஊரடங்கு அமல் படுத்தாவிட்டால் கொரோனாவை பரவுவதாக புகார் அளிக்கின்றனர். மேலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை மக்களிடையே பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் தடுப்பூசித் திட்டத்தினை கூட விட்டு வைக்க வில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்புவதுடன், கன்றுகுட்டியின் நிணநீர் தடுப்பூசியில் இருப்பதாக வதந்திகளை கிளப்பி மக்களிடையே தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப செய்வதாக கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு சேவையாற்றுவதில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சாதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…