குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன்விளைவாக தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது..இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இதில் பலர் காயமடைந்தனர்.மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் எதிர்கட்சிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் காங்கிரஸ்,திமுக,திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.அப்பொழுது குடியுரிமை சட்ட திருத்தத்தால் நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து மனு அளித்தார்கள்.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…