வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ! குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

Published by
Venu

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பில்  காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா, திமுகவை  சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

குடியரசு தலைவரை சந்திப்பதற்கு முன்பாக எதிர்கட்சியினரை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதை ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.”பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் (வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள்) குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன் சர்ச்சைக்குரிய  சட்டங்கள் குறித்து உட்கார்ந்து விவாதித்து கூட்டு நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்று  தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக அரசாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும்.ஆனாலும் டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

5 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

55 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago