hd Kumaraswami OM [Image-PTI]
பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற, வலுவான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த ஜுன் 23இல் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தின. அடுத்த கூட்டம் பெங்களுருவில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கர்நாடக தலைநகர் பெங்களுருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜனதா தள JD(S) கட்சியின் தலைவருமான குமாரசாமி, பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தனக்கு எதுவும் அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஜனதா தள கட்சியை, தங்களது ஒரு பகுதியாக நினைக்கவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நாங்களும் எந்த வித மிகப்பெரிய கூட்டணிக்கட்சியிலும் இணைய போவதில்லை. இதேபோல் பாஜக தரப்பிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், நாங்கள் வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…