PMModi akilshiksha [Image-ani]
இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியல் இரண்டையும் நமது கல்விமுறை பாதுகாப்பதோடு வளர்த்தும் வருகிறது என பிரதமர் பேச்சு.
இன்று பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு மற்றும், அகில் பாரத சிக்ஷா சமகம் இரண்டையும் பிரதமர் மோடி, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தொடங்கிவைத்தார். தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று பிரதமர் மோடி இந்த நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
அதன்பிறகு திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நமது கல்வி முறை குறித்து நாம் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை பெருமையுடன் கூறினார். காசியின் ருத்திராக்ஷம் தொடங்கி, நவீன இந்தியாவின் பாரத மண்டபம் வரை அகில் பாரத சிக்ஷா சமகம் பாரம்பரியம் மற்றும் நவீனம் இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் கூறிய பிரதமர் மோடி, நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதோடு, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியிலும், தொழில்நுட்பத்திலும் நாடு முன்னேற்றமைடைந்து வருவதற்கும் நமது கல்விமுறை பாதைகளை வகுக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…