கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 மணி நேரத்தில் மட்டும் 6 நோயாளிகள் உயிரிழப்பு

Published by
Rebekal

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் அம்மாநிலத்தில் 6 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் தான் பரவியுள்ளது. அதேபோல கர்நாடகாவில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் நெருக்கடிகளும் தற்போது அதிகம் காணப்படுகிறது. நிலையில் கர்நாடக மாநிலத்தில் உளள பெங்களூரில்உள்ள ஆர்கா மருத்துவமனையில் இன்று அதிகாலை இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கர்நாடக முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் ஆறு பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளில் தங்களிடம் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றக் கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் கிடைத்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால் நோயாளிகள் குணம் ஆகும் வரையில் அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜனை செலுத்த முடியாமல் போய் விடுகிறது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

32 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

19 hours ago