பத்மஸ்ரீ விருது பெற்றவரும் முன்னாள் ஐ.எம்.ஏ தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் கே.கே.அகர்வாலுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் டாக்டர் கே.கே.அகர்வால் உயிரிழந்தார்.
இதுகுறித்து,டாக்டர் கே.கே.அகர்வாலின் குடும்பத்தினர்,அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”தொற்றுநோய்களின் போது கூட, டாக்டர்.கே.கே.அகர்வால் மக்களை காப்பாற்றுவதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஏராளமான வீடியோக்களை பதிவிட்டார்,அந்த வீடியோ 100 மில்லியன் மக்களை சென்றடைந்தது.அதன் மூலம்,எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார்.அவர் தனது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார்.ஆனால்,தான் இறப்பது குறித்து துக்கப்படவில்லை”,என்று தெரிவித்தனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…