ஆகஸ்ட் 26 முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு கேரள பத்மநாபசுவாமி கோவில் பகதர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கேரளாவில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக spst.in என்ற கோவிலுக்கு உரித்தான வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தரிசனத்திற்கு வருகையில் அதன் நகலை எடுத்து வர வேண்டும். மேலும், ஒரிஜினல் ஆதார் அட்டையை எடுத்து செல்லவேண்டும்.
பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கோவிலுக்கு செல்வதற்கு முன் சோப்பு அல்லது சேனிடைசர் கொண்டு கை கழுவி விட்டு கோவில் உள்ளே செல்லவேண்டும். தரிசன நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.45 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு கட்டமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒருமுறை 35 நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 665 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என நிர்வாக அதிகாரி ரத்தீசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…