அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதிலும் குறிப்பாக லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 19 பேர் பலியாகினர். அதில், மீரட் நகரில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் , “பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்று கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியும், மீரட் காவல்துறை கண்காணிப்பாளருமான அகிலேஷ் நாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்றுவிடுங்கள் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக கோசம் போடுவது இந்திய இறையாண்மைக்கு நல்லது இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…