Categories: இந்தியா

தொடரும் கைதுகள் ..!! இந்திய கடலோரத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தானியர்கள் !

Published by
அகில் R

NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடத்திய இந்த சோதனையில் தற்போது 14 பாகிஸ்தான் வாசிகள் பிடிபட்டுள்ளனர். மேலும், இதே போல் இதற்கு முன்னும் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் NCB மற்றும் இந்திய கடற்படை ஆகியோர் இணைந்து 3,132 கிலோ இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றி உள்ளனர்.

இதில் அப்போது ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்தனர். அதில் பிடிபட்ட அந்த 5 பேரும் பாகிஸ்தான் அல்லது ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று NCB மற்றும் இந்திய கடற்படை சந்தேகிக்கப்படும் நிலையில் தற்போது இந்த கைதும் நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தற்போது நடைபெற்ற கைதையும் சேர்த்து மொத்தம் 3 கைதுகள் NCB மற்றும் இந்திய கடற்படையினர் செய்த்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்திய கடற்படையுடன் இணைந்து போதை பொருள் கட்டுப்பட்டு நிர்வாகமும் (NCB) மேற்கொண்டது.  அதில் முதலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குஜராத் கடற்கரையில் ஒரு கப்பலில் இருந்து 221 கிலோ மெத்தம்பேட்டமைனை (Methamphetamine) கைப்பற்றினார்கள் . அதன் பின் அதே ஆண்டியின் அக்டோபர் மாதத்தில் கேரள கடற்கரைக்கு அருகே ஒரு கப்பலில் இருந்து மற்றொரு 200 கிலோ உயர்தர போதை பொருளான ஹெராயினை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து 2-வதாக கடந்த ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு கப்பலில் இருந்து சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2500 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (NCB) கைப்பற்றியது. இதனால் அந்த போதைப்பொருளான மெத்தாம்பெட்டமை இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் உள்ள ட்ரக் கார்டெல்களிடம் (Drug Cartel) வந்து சேர்வதற்கு முன்பே முன்பு இந்திய பெருங்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago