#Justnow:மக்களே கவனிக்கவும்…இனி இதற்கு பான் (அல்லது) ஆதார் எண் கட்டாயம் !

Published by
Edison

வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது.

பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய திருத்தங்களை அறிவித்துள்ளது.அதன்படி,கேஷ் கவுண்டரில் அதிக டெபாசிட் மற்றும் பணத்தை திரும்பப் பெறுபவர்கள் பான் அல்லது ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,புதிதாக வங்கி கணக்கை தொடங்கும்போதும் இந்த விதிமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஏற்கனவே பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணக்குகளுக்கு இந்த விதி பொருந்தும்.

அதே சமயம்,வணிக வங்கியில் மட்டுமின்றி கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களிலும் கணக்குகள் தொடங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.இதன் மூலம், வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தபால் அலுவலகம் உள்ளிட்ட வாடிக்கையாளர் மற்றும் நிதி நிறுவனங்களில் பரிவர்த்தனையைத் தொடங்கும் போது பான் மற்றும் ஆதார் விவரங்களை மேற்கோள் காட்ட வேண்டியது அவசியம்.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago