Union Finance Minister Nirmala Sitharaman [File Image]
டெல்லி: வரும் ஜூலை 23ஆம் தேதி 2024- 2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். மக்களவை தேர்தலை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கபட்டர்.
இதனை அடுத்து 2024 -2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டானது வரும் ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்றும், இதற்காக நாடளுமன்றத்தை கூட்டுவதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் என அறிவித்துள்ளார்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…