Union Finance Minister Nirmala Sitharaman [File Image]
டெல்லி: வரும் ஜூலை 23ஆம் தேதி 2024- 2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். மக்களவை தேர்தலை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கபட்டர்.
இதனை அடுத்து 2024 -2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டானது வரும் ஜூலை 23இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்றும், இதற்காக நாடளுமன்றத்தை கூட்டுவதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் என அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…