28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர் கன்னியாஸ்திரி குற்றவாளிகள் என தீர்ப்பு!

Published by
லீனா

கன்னியாஸ்திரி அபயா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா. இவர் அங்குள்ள பிஎம்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்துள்ளார். இதனை அடுத்து, இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இந்த கான்வென்ட் வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கோட்டையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிபிஐ குழு நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளிகளை கண்டறிய சிபிஐ குழு அமைக்கப்பட்ட நிலையில், அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடிக்கப்பட்டது. பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ள நிலையில், இதை ஒருமுறை அபியா நேரில் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

தங்களின் தகாத உறவை அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கேரள ஐகோர்ட்டை  அணுகியுள்ளார்.
பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற இருவர் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.  இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்ப்பை கேட்டதும் பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் கதறி அழுதனர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by
லீனா

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

7 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

8 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

8 hours ago