leopards [file image]
ஹரியானா : குருகிராமில் உள்ள திக்லி கிராமத்தில் சிறுத்தைகள் பசுவை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் திடீரென மாட்டு தொழுவில் புகுந்த அந்த சிறுத்தைகள் இறைக்காக பசு மாடுகளை கொன்றது அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் மாட்டு சந்தையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவில் பதிவாகி இருக்கிறது. வீடியோவில் இரண்டு சிறுத்தைகள் மாட்டு தொழுவிற்குள் புகுந்து அங்கிருந்த 10 மாடுகளை கொன்றது. மிச்சம் கிடைத்த மாடுகளின் உடல்களும் வீடியோ காட்சியில் பதிவாகி இருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் இரண்டு சிறுத்தைப்புலிகள் நடமாடியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாட்டுத்தாவணி நிர்வாகத்திடம் அதன் எல்லை சுவரின் உயரத்தை உயர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்து . அந்த இரண்டு சிறுத்தைகளை பிடிக்க வலைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திறந்தவெளி பகுதி என்பதால் சிறுத்தைப்புலிகள் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருந்தாலும், நாங்கள் சிறுத்தையை பிடிக்க கண்டிப்பாக கூண்டுகள் அமைப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல வன விலங்குகளின் இருப்பிடமான ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முன்னதாக இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாடும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மாட்டு சந்தைக்குள் புகுந்து 10 மாடுகளை கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…