குடும்ப மருத்துவ காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கும் மக்கள்….!

Published by
லீனா

இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகம். 

மத்தியில் பெரும்பாலான மக்கள் தங்களது சுகாதார காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பித்து வருகின்றனர். இதுகுறித்து பாலிசிபஜார்.காம் மேற்கொண்ட ஆய்வின் படி கடந்த ஆண்டுகொடுக்கப்பட்ட அனைத்து குடும்ப சுகாதார காப்பீட்டு கொள்கைகளில் 85% மேற்பட்டவை காலாவதி ஆவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் சுகாதார காப்பீட்டு திட்டங்களை சுமார் 80% வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகளை திட்டமிட்ட காலத்துக்குள் புதுப்பித்துள்ளனர்.

இதுகுறித்து பாலிசிபஜார்.காமின் தலைமை சுகாதார காப்பீட்டின் தலைவர் அமித் சாப்ரா கூறுகையில், மக்கள் கொரோனா வைரஸ், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மக்களை தாக்க கூடும் என்றும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோயிலிருந்து நிதி ரீதியாக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி ஒரு விரிவான ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆன்லைன் மூலமாக, தனிப்பட்ட சுகாதார காப்பீடு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 94% பேர் புதுப்பித்துள்ளனர். அதேசமயம் குடும்ப சுகாதார காப்பீடு திட்டத்தை 97% சதவீதம் பேர் புதுப்பித்துள்ளனர். இத்தகைய உயர் புதுப்பித்தல் விகிதங்களை பார்க்கும் போது, தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும்போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த சுகாதார வசதிகளை பெறுவதில் காப்பீட்டின் பங்கை மக்கள் படிப்படியாக உணர்ந்துள்ளனர்.

சுகாதார காப்பீட்டு கொள்கையை உரிய தேதிக்குள் புதுப்பிப்பதின் மூலம் ஒருவர் தடையற்ற பாதுகாப்பு உரிமை கோரல், போனஸ் சலுகைகள் போன்ற சலுகைகளை பெற தங்களது ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். மேலும், நுகர்வோர் இப்போது சுகாதார காப்பீட்டு புதுப்பித்தலின் போது பிரீமியம் தள்ளுபடியைப் பெற தங்கள் ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியவர்களில் 20% க்கும் அதிகமானோர் இந்த ஆண்டு ‘wellness points’ மூலம் தங்களது காப்பீட்டை புதுப்பித்துள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

2 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

2 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

4 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

4 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

5 hours ago