குடும்ப மருத்துவ காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கும் மக்கள்….!

Published by
லீனா

இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகம். 

மத்தியில் பெரும்பாலான மக்கள் தங்களது சுகாதார காப்பீட்டை காலாவதியாவதற்கு முன்பதாகவே புதுப்பித்து வருகின்றனர். இதுகுறித்து பாலிசிபஜார்.காம் மேற்கொண்ட ஆய்வின் படி கடந்த ஆண்டுகொடுக்கப்பட்ட அனைத்து குடும்ப சுகாதார காப்பீட்டு கொள்கைகளில் 85% மேற்பட்டவை காலாவதி ஆவதற்கு முன்பதாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் சுகாதார காப்பீட்டு திட்டங்களை சுமார் 80% வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகளை திட்டமிட்ட காலத்துக்குள் புதுப்பித்துள்ளனர்.

இதுகுறித்து பாலிசிபஜார்.காமின் தலைமை சுகாதார காப்பீட்டின் தலைவர் அமித் சாப்ரா கூறுகையில், மக்கள் கொரோனா வைரஸ், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மக்களை தாக்க கூடும் என்றும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோயிலிருந்து நிதி ரீதியாக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி ஒரு விரிவான ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டு தங்கள் சுகாதார காப்பீட்டு கொள்கைகளை புதுப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆன்லைன் மூலமாக, தனிப்பட்ட சுகாதார காப்பீடு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் 94% பேர் புதுப்பித்துள்ளனர். அதேசமயம் குடும்ப சுகாதார காப்பீடு திட்டத்தை 97% சதவீதம் பேர் புதுப்பித்துள்ளனர். இத்தகைய உயர் புதுப்பித்தல் விகிதங்களை பார்க்கும் போது, தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும்போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த சுகாதார வசதிகளை பெறுவதில் காப்பீட்டின் பங்கை மக்கள் படிப்படியாக உணர்ந்துள்ளனர்.

சுகாதார காப்பீட்டு கொள்கையை உரிய தேதிக்குள் புதுப்பிப்பதின் மூலம் ஒருவர் தடையற்ற பாதுகாப்பு உரிமை கோரல், போனஸ் சலுகைகள் போன்ற சலுகைகளை பெற தங்களது ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். மேலும், நுகர்வோர் இப்போது சுகாதார காப்பீட்டு புதுப்பித்தலின் போது பிரீமியம் தள்ளுபடியைப் பெற தங்கள் ‘wellness points’-ஐ பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியவர்களில் 20% க்கும் அதிகமானோர் இந்த ஆண்டு ‘wellness points’ மூலம் தங்களது காப்பீட்டை புதுப்பித்துள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

9 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

9 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

11 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

14 hours ago