மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்த மக்கள்…!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை கடவுளை மகிழ்விப்பதற்காகவும், வறட்சி நீங்கி மழை நன்கு பெய்யும் வேண்டும் என்பதற்காகவும் அப்பகுதி மக்கள் ஒரு சடங்கை  செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக 6 பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் புந்தேல்கண்ட் பிராந்தியத்திலுள்ள தாமோ மாவட்ட தலைமையகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜபேரா எனும் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பனியா எனும் கிராமத்தில் இந்த சடங்கு நடந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் மழை  கடவுளை மகிழ்விப்பதற்காக இளம் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலமாக மழை வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற மூடநம்பிக்கைகள் பயனற்றது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago