இலவச தரிசனத்துக்கு அனுமதி ரத்து – திருப்பதியில் பக்தர்கள் போராட்டம்!

Published by
Rebekal

திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு இலவச தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக வழிபாட்டு தளங்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் அண்மையில் திறக்கப்பட்டு தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருப்பதிக்கு தற்போது ஏராளமான பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக முன் அனுமதி பெற்று பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர்.

ஆனால், தற்போது திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் மற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் தற்பொழுது வீரியமுள்ள கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஜனவரி 3 ஆம் தேதி வரையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை அறிந்து கொள்வதற்கு முன்பாகவே திருப்பதிக்கு சென்ற இலவச தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. எனவே, பலர் ஏமாற்றம் அடைந்ததால், சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

3 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

4 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago