Allahabad HC allows ASI to conduct survey [Image Source: Twitter/@ani]
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கு முன் கோயில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை அறிய ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி மசூதியில் பழங்கால இந்து கோயில் இருந்ததாக கூறி 4 பெண்கள் வாரணாசியில் வழக்கு தொடர்ந்தனர். இதன்பின், வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி தந்ததை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் மேல்முறையீடு செய்தது.
இதனையடுத்து, இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. அதன்படி, இஸ்லாமிய அமைப்பு மனு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…