இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும், மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், லேசான அறிகுறிகள் தெரிந்தாலே, மக்கள் அருகில் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது.
மேலும் வீட்டிற்கு சென்று, மாதிரிகளை சேகரித்து சோதனை மேற்கொள்ள, ரூ.750 கட்டணம் நிர்ணயித்துள்ளது. மாநிலத்தில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…