இரு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி.!

Published by
பாலா கலியமூர்த்தி

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர கால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக போடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்புட்னிக், பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இதுபோன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரே டோஸ் போடும் வகையில் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு சமீபத்தில் அனுமதியை வழங்கியிருந்தது. இதனிடையே, பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR) தெரிவித்திருந்தது.

ஒருவர் ஒரு டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டியிருந்தது. இந்த நிலையில், இருவேறான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்ததை அடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

1 hour ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

1 hour ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

2 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 hours ago