சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!

Published by
murugan

சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் புதிய புத்தகமான “சன்ரைஸ் ஓவர் அயோத்யா” தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த புத்தகத்திற்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்.

இந்த புத்தகத்தில், சல்மான் குர்ஷித் இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அடிப்படைவாத குழுக்களுடன் ஒப்பிட்டுள்ளார். இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சல்மான் குர்ஷித்தின் “சன்ரைஸ் ஓவர் அயோத்யா” புத்தகத்தை வெளியிடவும், விற்கவும் தடை விதிக்கக் கோரி டெல்லியின் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் புத்தகத்தில் ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இந்துத்துவாவை ஒப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டின் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகத்தை தடை கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் யாரையும் படிக்கச் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படிக்காமல் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து புத்தகத்திற்கு தடை கோரிய மனுவை  நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளுபடி செய்தார்.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

32 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago