உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறினால் எங்களின் மாநகர பெயரான ஹைதரபாத்தை நீக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அவர்களின் உள்ளூர் வீரர்களுக்கு இடமளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ தனம் நாகேந்தரும் அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் மாநிலத்தில் திறைமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வாய்ப்பு வழங்காமல் அவர்களை தேர்வின்போதும், ஏலத்தின்போதும் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்த சூழல் தொடர்ந்தால், கிரிக்கெட் போட்டியை அனுமதிக்கமாட்டோம் என்றும், உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறினால் எண்களின் மாநகர பெயரான ஹைதரபாத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…