பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து வந்த ஒரு புறா, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு புறா வந்துள்ளது. அந்த புறா வந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்தது. அப்போது அந்த புறாவை தூக்கிய பாதுகாப்பு படை வீரர், அதன் காலில் ஒரு துண்டுச்சீட்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த அவர் அந்த சீட்டினை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ஒரு போன் நம்பர் இருந்துள்ளது. இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அந்த புறாவை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தோடு புகாரில் இதுகுறித்து சட்டபூர்வமாக விசாரித்து புறா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சீனியர் காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் இது குறித்து கூறுகையில், புறா ஒரு பறவை. அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சாத்திய அறிக்கையை சட்ட துறையினரிடம் கேட்டுள்ளோம். புறா காலில் இருந்த துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த மொபைலின் குறித்தும் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…