கேரள முதலமைச்சராக 2-வது முறையாக பினராய் விஜயன் பொறுப்பேற்றுள்ளார்.
கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழா திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பினராய் விஜயன் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே புதுமுகங்களாக உள்ளனர். மேலும், இவரது அமைச்சரவையில் பினராய் விஜயன் மருமகன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…