நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, வாரணாசி மற்றும் குஷிநகர் ஆகிய மூன்று இடங்களிலும் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நான்காவதாக அயோத்தியில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐந்தாவதாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் 2024 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனவும், 34 ஆயிரம் கோடி செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விமான நிலைய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது.பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், நவம்பர் 25 உள் கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கியமான நாள். மதியம் ஒரு மணிக்கு நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டம் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…