Categories: இந்தியா

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா திட்டதின்’ கீழ்  ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இயக்கத்தில் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

அதைப்போல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்திலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா டெல்லியிலும் கலந்துகொண்டனர். இந்த நிலையில்,  பிரதமர் மோடி இன்று மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து தன் கைகளால் குப்பைகளை அகற்றினார். அவருடன் இணைந்தது அங்கித் பையன்பூரியாவும் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் போட்டனர்.

இது தொடர்பான வீடியோவையும் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில் மோடி கூறியதாவது ”  தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மளுடைய தேசமே கவனம் செலுத்தி வருகிறது. எனவே, இன்று காலை நானும் அங்கித் பையன்புரியாவும் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டோம். உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை பற்றியும் நாங்கள் கலந்துரையாடினோம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், 2014-ல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி  அன்று  இந்தியா முழுவதும் சுகாதாரம்,  தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தூய்மை இந்தியா’ எனும் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார்.  கடந்த 8-ஆண்டுகளாக இந்த திட்டத்தின் மூலம் அக்டோபர் 1-ஆம் தேதி சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

19 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago