Categories: இந்தியா

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா திட்டதின்’ கீழ்  ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இயக்கத்தில் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

அதைப்போல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்திலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா டெல்லியிலும் கலந்துகொண்டனர். இந்த நிலையில்,  பிரதமர் மோடி இன்று மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து தன் கைகளால் குப்பைகளை அகற்றினார். அவருடன் இணைந்தது அங்கித் பையன்பூரியாவும் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் போட்டனர்.

இது தொடர்பான வீடியோவையும் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில் மோடி கூறியதாவது ”  தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மளுடைய தேசமே கவனம் செலுத்தி வருகிறது. எனவே, இன்று காலை நானும் அங்கித் பையன்புரியாவும் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டோம். உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை பற்றியும் நாங்கள் கலந்துரையாடினோம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், 2014-ல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி  அன்று  இந்தியா முழுவதும் சுகாதாரம்,  தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தூய்மை இந்தியா’ எனும் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார்.  கடந்த 8-ஆண்டுகளாக இந்த திட்டத்தின் மூலம் அக்டோபர் 1-ஆம் தேதி சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

32 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago