Categories: இந்தியா

பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கண்ணீரை பார்க்க காங்கிரசுக்கு நேரமில்லை.. பிரதமர் கடும் குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் (நவம்பர் 25) 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மாநில ஆட்சி பொறுப்பில் காங்கிரஸ் இருக்கிறது. எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்திலும் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று அந்தா, பாரனில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

அப்போது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில்  ராஜஸ்தான் மக்களுடன் பாஜக எப்போதும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் ‘வளர்ந்த நாடு’ என இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம்.

வளர்ந்த இந்தியாய்வில் ராஜஸ்தானின் வளர்ச்சியை சேர்க்காமல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முழுமையடையாது. ஆனால், நமது நாட்டின் மூன்று எதிரிகளான ஊழல், வாரிசு அரசியல், தீமையுடன் துணை நிற்றல் ஆகிய மூன்றும் இருக்கும் வரை, வளர்ந்த இந்தியா நோக்கம் ராஜஸ்தானில் நிறைவேறுவது கடினம். காங்கிரஸின் மிகப்பெரிய சின்னமே . மேற்கண்ட இந்த மூன்று தீமைகள் தான்.

ராஜஸ்தானின் “ரெட் டைரி” பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த “சிவப்பு டைரி”யின் பக்கங்களை புரட்டும்போது, முதல்வர் முகம் வாடுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் உங்கள் தண்ணீரை, காடுகளை, நிலங்களை காங்கிரஸ் அரசு எப்படி விற்றது என்பதை இந்த “சிவப்பு டைரி” தெளிவாகக் கூறிவிடும்.

காங்கிரஸில் – அமைச்சர்கள் , எம்எல்ஏக்களால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள பொதுமக்களை கொள்ளையர்கள், கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் காங்கிரஸ் அரசு ஒப்படைத்துள்ளது.

காங்கிரஸின் ஆதரவுடன் சமூக விரோத சக்திகளின் ஆதிக்கம் ராஜஸ்தானில் அதிகமாக உள்ளது. ஜாலவாரில் தலித் இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் அறிவர்.

சாப்ரா கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல்வர் இல்லத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு இருக்கிறது. கலவரக்காரர்கள் தவிர, காங்கிரஸ் அமைச்சர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

ராஜஸ்தானின் பெண்கள் அம்மாநில அரசிடம் பாதுகாப்பு கேட்டபோது, பொய்யாக குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என அம்மாநில அரசு கூறுகிறது. பெண்களின் கண்ணீரைப் பார்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு நேரமில்லை எனவும் ராஜஸ்தானில் அளவும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.

Recent Posts

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

16 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

1 hour ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…

4 hours ago