நேற்று காலை( ஜனவரி 17-ஆம் தேதி )துள்ளியமாக கூறினால் அதிகாலையில் 2.35 மணியளவில் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின் பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் கோனக்ட்’ செயற்கைக் கோள்களுடன், ஏரியன் – 5′ என்ற ராக்கெட், சரியாக இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த வெற்றியை வாழ்த்தும் விதமாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், நடப்பு 2020 ம் ஆண்டுக்கான முதல் செயற்கை கோளை ஏவிய இஸ்ரோ அமைப்பிற்கு இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் ‘ஜிசாட் – 30’ அதன் அதன் தனித்துவமான உள்ளமைவுடன் டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், ஏடிஎம்களுக்கான இணைப்பு, பங்குச் சந்தைகள் மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றை வழங்கும் எனவும் இந்த செயற்கை கோளின் சிறப்பு அம்சங்களையும் தெரிவித்து உள்ளார்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…