ஊரடங்கை மீறியதற்காக சிறுவனை தாங்கிய போலீசார்….! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!

Published by
லீனா

உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கை மீறியதாக கூறி 17 வயது சிறுவனை போலீசார் தாக்கியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உன்னவ் மாவட்டம், பங்கார்மாவு நகரில் உள்ள பாத்பூரி பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று தனது வீட்டிற்கு வெளியே காய்கறி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த, இரண்டு காவல் துறையினர் ஊரடங்கு மீறியதாகக் கூறி அந்த சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளனர். இதனை குடும்பத்தினர் வந்து தடுத்துள்ளனர். அப்போது விடாத போலீசார் அந்த சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

போலீசார் தாக்குதலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காவல்துறையினர் கொண்டு சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களையும் சிறுவனின் குடும்பத்தாரையும் போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து சிறுவனை தாக்கிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் சிறுவனை தாக்கிய விவகாரத்தில் தலைமை காவலர் விஜய் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்க்காவல் படை வீரர் சத்யபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது  என்றும் தெரிவித்தனர்.

Published by
லீனா

Recent Posts

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

24 minutes ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

57 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

1 hour ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

1 hour ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

2 hours ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

11 hours ago