Categories: இந்தியா

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு.

கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதன்பின், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றனர்.

இவர்களை தொடர்ந்து மொத்தம் கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டது. இதில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், கேபினட் விவாகாரத்துறையும்துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறை, பெங்களூரு நகர வளர்ச்சித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சமயத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதுபோல் பெங்களூரு காவல்துறை ஆணையராக பணியாற்றிய பிரதாப் ரெட்டி உள் பாதுகாப்பு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பெங்களூரு போக்குவரத்துறை ஆணையராக பணியாற்றிய டாக்டர் எம்.சலீம் குற்றவியல் கூடுதல் டிஜிபியாகவும், ஐபிஎஸ் அதிகாரி சரத் சந்திரா சிஐடியில் இருந்து உளவுத்துறை ஏடிஜிபியாக மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

5 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

6 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

7 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

7 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

8 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

10 hours ago