5 முறை பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் காலமானார்.! 2 நாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.!

Published by
மணிகண்டன்

5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார் .

பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கி தெரிவித்து வருகின்றனர். ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக இவரது மறைவு பார்க்கப்படுகிறது. இவரவு மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்க படுகிறது என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தனது 20 வயதில் அரசியலில் நுழைந்துள்ளார். சிரோன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 10 முறை சட்டமன்றத்திற்கு எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளர். அடுத்து, 1977 மற்றும் 1997 என 2வது மற்றும் 3வது முறையாக முதல்வராக இருந்துள்ளார். அடுத்து, 2007 முதல் 2017 வரையில் தொடர்ந்து 2 முறை என் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார் பிரகாஷ் சிங் பாதல் . இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் கூட 95 வயதில் தேர்தல் களம் கண்டார் பிரகாஷ் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago