பரபரப்பு…புதிய இயக்கத்தை தொடங்கும் பிரசாந்த் கிஷோர்!

Published by
Edison

கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு:

அந்த வகையில்,சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து,கட்சியை மேம்படுத்துவது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்ததாகவும்,காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த நிலையில்,அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய அரசியல் கட்சி:

இந்த சூழலில்,அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும்,மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது ஆலோசனையானது 10 ஆண்டுகள் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு (பிரதமர் மோடி தலைமையிலான அரசு) வழிவகுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே,மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என சூசகமாக தெரிவித்திருந்தார்.இதனால் பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகினது.

இந்நிலையில்,’ஜன் ஸ்வராஜ்’ இயக்கத்தை தொடங்கவுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.மேலும், முதற்கட்டமாக,அக்டோபர் 2 முதல் பீகாரில் மேற்கு சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து 3000 கி.மீ. நடைபெயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால்,புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.இருப்பினும்,தேவைப்பட்டால், ஆகஸ்ட்-செப்டம்பர் வரை மக்களைச் சந்தித்து அரசியல் கட்சியின் வடிவம் தீர்மானிக்கப்படும் என்றும்,பீகாரில் என்னை அரசியல் ஆர்வலராகப் பார்ப்பீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வரும் சூழலில்,பிரசாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago