பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது போன்ற தன்னுடைய வித்தைகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். பலர் நம்பி அவரிடம் பூஜைக்கும் சென்று உள்ளனர். இந்நிலையில் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருந்த தம்பதியினரும் அவரிடம் சென்றுள்ளனர். அவர் மூன்று மாதங்கள் பூஜை செய்து வந்தால் பேயை ஒரேடியாக விரட்டி விடலாம் என கூறியதை நம்பி அவர்களும் சம்மதம் தெரிவித்து தினமும் சிறுமியை மந்திரவாதியிடம் கூட்டி சென்றனர்.
அங்கு பூஜை செய்கிறார் என நம்பி தனியறையில் சிறுமியை விட்டு பூஜை முடிய சிறுமியை அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு மிகுந்த உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது மந்திரவாதி தினமும் தனக்கு தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பலாத்காரம் செய்வார் எனவும், ஆனால் அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் போலி மந்திரவாதி பிரசாதை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதோடு செருப்பு மற்றும் கற்களாலும் அடித்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மந்திரவாதி பிரசாத்தை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…