#BREAKING: கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை- உத்தரவை வாபஸ் பெற்ற SBI!

Published by
murugan

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வழிகாட்டுதலில், மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை  SBI திரும்பப்பெற்றது.

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தனது புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான மருத்துவ உடற்தகுதி வழிகாட்டுதல்களில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருத வேண்டும்.

குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் பிறகு தான் அவருக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தது. இந்த புதிய ஆணைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் அதிருப்தி தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். மேலும் பலர் பாரத ஸ்டேட் வங்கியின் செயலுக்கு  தங்களது கண்டங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், கருவுற்ற 3 மாத பெண் பணி நியமனத்திற்கு தகுதி அற்றவர் என்ற உத்தரவை எஸ்.பி.ஐ திரும்பப்பெற்றது. எஸ்.பி.ஐ உத்தரவு அரசியல் சாசன பாலின சமத்துவத்துக்கு எதிரானது என கண்டனம் எழுந்த நிலையில் அந்த உத்தரவை எஸ்.பி.ஐ ரத்து செய்தது.  கொரோனா காலகட்டத்தில், அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: SBI

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

3 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

4 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

4 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

4 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

5 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

6 hours ago