ப்ரீபெய்டு திட்டம்- 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் -டிராய் உத்தரவு..!

Published by
murugan

ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு  கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு  (அதாவது முழு மாதத்திற்கும்) செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என  TRAI அறிவுறுத்தியுள்ளது.

முன்பு ப்ரீபெய்ட் பேக்குகள் 30 நாட்களுக்குக் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை 28 நாட்களாக குறைத்தன. இதன் விளைவாக ஒரு வாடிக்கையாளர்  வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில்  சுமையாக மாறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் 30 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளைக் கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் திட்ட வவுச்சர், சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவை இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. டிராயின் புதிய முடிவு மொபைல் போன் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை   ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago