Droupadi Murmu [file image]
டெல்லியில் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி இந்த (2023) ஆண்டுக்கான “பூமி சம்மான்” விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். இந்த விருது விழாவில் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 9 மாநில செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்கள் விருது பெற உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார். டெல்லியில் வரும் ஜூலை மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த “பூமி சம்மான்” விழாவில் பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக “பூமி சம்மான்” விருது பெறும் மாநிலத்தின் வருவாய் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது “பூமி சம்மான்” நிறுவனமயமாக்கலுக்கான முக்கிய ஆண்டாக இருக்கும். நம்பிக்கை மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான மத்திய-மாநில கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு பூமி சம்மான் திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…